ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் பிரதிபலிப்பு திருச்சியிலும் தொடர்ந்தது .திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். முன்னதாக மாநகராட்சி முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ரெக்ஸ் கோவிந்தராஜன், சோபியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரன், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் சுரேஷ்,மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பை அகமது ஆகியோர் கருப்பு சட்டை அணிந்துவந்து கலந்து கொண்டனர்.
