சட்ட விரோதமாக வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை-திருச்சி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!
திருச்சி மாநகராட்சி, மண்டலம் எண் 4, வார்டு எண்.56 ராம்ஜி நகர் பகுதியில் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று(21-08-2024) காலை குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் குடிநீர் விநியோக குழாயில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது. அதன்பேரில், 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்கப் பெறுவதில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed.