திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ஹைலைட்ஸ்.
#அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் ஒரு 38 கோடி அடைப்பு!
#3முதியோர் இல்லங்கள்.
#5இடங்களில் சமுதாயக் கூடங்கள்
#அரியமங்கலத்தில் குப்பை கிடங்கு அகற்றம்.
#5 இடங்களில் புதிய பாலங்கள்.
#சங்கிலியாண்ட புரம் தென்னூர் அண்ணா நகர் குழுமிக்கரையில் நவீன எரிவாயு மையம்.
#கழிவு நீர் தொட்டிகள் ரோ பார்ட் மூலம் சுத்தமாகிறது.
#பஞ்சப்பூரில் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கம்.
#ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம்.
# பஞ்சப்பூரில் டைட்டில் பார்க்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பட்ஜெட்டை நிதி குழு தலைவர் முத்து செல்வம் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக மேயர் அன்பழகன் வரவு செலவுத் திட்டம்குறித்து பேசினார்.அதன் விவரம் வருமாறு:
• கடந்த ஆட்சியில் திட்டங்களுக்கு 10 நிறுவனங்களில் அதிக வட்டியுடன் பெறப்பட்ட கடன் தொகையில் தற்போது ரூ.38 கோடி கடன் அடைக்கப்பட்டுள்ளது
• அம்ரூத் மற்றும் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 849 கி.மீ நீளத்திற்கு பாதாளச் சாக்கடை பணிகளில் 520கி.மீ முடிவுற்றது.175 கி.மீ நடைபெற்றுவருகிறது.இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் 2022-2023ம் நிதியாண்டில் 159.19 கி.மீ நீளத்திற்கு ரூ.154.98 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்பட்டு 303 கி.மீ முடிவுற்றது .86கி.மீ நடைபெற்றுவருகிறது.
• 4 நாய் கருத்தடை மையங்கள் கட்டப்பட்டு நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் ஒரு நாய் கருத்தடை மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது நாய் பிடிக்கும் வாகனம் இரண்டு உள்ளது. மண்டலத்திற்கு ஒன்று வீதம் மேலும் மூன்று நாய் பிடிக்கும் வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• மாடு பிடிக்கும் வாகனம் ஒன்று ரூ.30.00 இலட்சம் செலவில் வாங்கப்பட்டு தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகிறது. உரிமையாளர்கள் மீண்டும் கோரும் பொழுது அபராதம் கட்டிய பிறகு, உரிமையாளர்களுக்கு மாடுகள் திரும்ப வழங்கப்படுகிறது.மேலும் இரண்டு வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
• மேலும் எதிர்வரும் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 250 கி.மீ நீளத்திற்கு சாலைகள்u புதுப்பிக்கப்படும்.
• மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்திரவிற்கிணங்க, ஐந்து இடங்களில் புதியதாக பாலங்கள் கட்டப்படவுள்ளது. (ஏ.யு.டி காலனி முதல் குழுமணி சாலை வரை, குழுமிக் கரை சாலை முதல் 5 ரோஸ் திருமண மண்டபம் வரை, காராயி அம்மன் கோவில் அருகிலும், துரைசாமிபுரம் முதல் பிச்சை நகர் வரை மற்றும் காட்டூர் பாலாஜி நகர் கவுர் வாய்க்கால்)
• முதற்கட்டமாக 7 வார்டுகளில் 24 x 7 குடிநீர் வழங்கும் திட்டம் பரிட்சார்த்த முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
• ஒவ்வொரு வார்டிற்கும் ரூ.25.00 இலட்சம் சாலைப் பணிகளுக்கெனவும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.50.00 இலட்சமும், பல்நோக்கு அலுவலக மக்கள் பயன்பாட்டிற்கு பயன்பாட்டுக் கட்டிடங்கள் கட்டிட ரூ.25.00 இலட்சம் வீதம், ஆக மொத்தம் ரூ.100.00 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
• உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர் தங்குவதற்கு 3 இடங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் தலா ரூ.100.00 இலட்சம் வீதம் ரூ.300.00 இலட்சம் மதிப்பீட்டில் 3 இல்லங்கள் கட்டப்படும்
• 5 மண்டலங்களிலும், மண்டலத்திற்கு தலா ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 சமுதாயக் கூடங்கள் புதிதாக ரூ.500.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்
• புதைவடிகால் உந்து நிலையங்களில் துர்நாற்றம் இல்லாமல் நவீன முறையில் பராமரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
• அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பூமிக்கடியில் சுமார் 6 அடி ஆழத்திற்கு சுமார் 7 லட்சம் டன் குப்பைகள் பயோ மைனிங் முறையில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• மாநகராட்சி எல்லைக்குள் செல்லும் பொதுப் பணித் துறையினருக்கு சொந்தமான வாய்க்கால்கள் 11 இடங்களில் சுமார் 82.69 நீளத்திற்கு மூடுகல் கொண்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
• கொல்லாங்குளம் சுமார் ரூ.2700.00 இலட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும்
• மிளகுபாறை குளம், சின்னமிளகுபாறை குவாரி, தாமரைக்குளம், கொட்டப்பட்டு குளம், பஞ்சப்பூர் ஊரணி குளம் ஆகிய அனைத்து குளங்களும் கரைகள் அமைத்து நடைபாதையுடன் மரங்கள் வைத்து படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
• ஜல்லிக்கட்டு சாலை நடைபாதையில் குறுக்கு பாலம் அமைத்து அழகுப்படுத்தப்படும்.
• அண்ணா ஸ்டேடியம் சாலை சுற்றிலும் வண்ண ஒளிவிளக்குகளால் அழகுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
• விடுபட்ட பகுதிகளில் சுமார் 6264 தெருவிளக்குகள் ரூ.1397.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
• பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டிப்புதூர் பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளிகள் மேலும் ரூ.1500.00 இலட்சம் மதிப்பீட்டில் மேன்மைப்படுத்தப்படும்
• 1. மூலதன(CGF)நிதியின்2021-22ன்கீழ்நவீனஎரிவாயுமையங்கள்கட்டும்பணி ரூ.300.00 லட்சம்மதிப்பீட்டில்2 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
2. 2022-2023ம் நிதியாண்டில் சங்கிலியாண்டபுரம் மற்றும் தென்னூர் அண்ணா நகர் குழுமிக்கரை பகுதியில் புதிய நவீன எரிவாயு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. கழிவு நீர் தொட்டிகளில் ஆட்களினை வைத்து சுத்தம் படுத்தும் நிலையை மாற்றி ரோபார்ட் மூலம் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
• இம்மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சுமார் 100 கி.மீ நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
• பஞ்சப்பூரில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்துவதற்கான ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
• ஶ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
• பஞ்சப்பூரில் காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
• பஞ்சப்பூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டைடல் பார்க் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
• அம்ரூத் நிதி திட்டத்தின்கீழ் நான்காம் தொகுப்பாக விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி மற்றும் பஞ்சப்பூரில் புதிய நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
• இம்மாநகராட்சி பகுதிகளில் இரண்டு பூங்காக்கள் புதியதாக அமைக்கும் பணி ரூ.200 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
• சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல, இந்த ஆண்டும் ஒவ்வொரு வார்டு குழுவிற்கும் சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்வது மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதற்கு வார்டு ஒன்றிற்கு ரூ.10.00 இலட்சம் வீதம், 65வார்டுகளுக்கு மொத்தம்ரூ.650 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• மாநகரில் உருவாகும் ஈரக்கழிவுகளிலிருந்து CNG காஸ் தயாரித்து கொள்கலன்களில் நிரப்பி பயன்படுத்தும் திட்டம் (100MT capacity CNG Bottling Plant) சுமார் ரூ.35.00 கோடி மதிப்பீட்டில் SBM நிதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் எரிபொருள் மாநகராட்சி வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தி தற்பொழுது எதிர்கொள்ளும் எரிபொருள் செலவீனத்தை குறைக்க இயலும்.
• தினசரி உருவாகும் உலர்கழிவுகளை தரம்பிரித்து அவற்றை முறையாக அப்புறப்படுத்தும் வகையில் 200MT உலர்கழிவுகளை கையாளத்தக்க வகையில் ஒருங்கினைந்த உலர்கழிவுகளை கையாளும்மையம் (MRF) SBM நிதியில் மேற்கொள்ள நடவடிக்கையில் உள்ளது.
• மாநகரில் உருவாகும் கட்டிடகழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி மறுபயன்பாடு பொருட்களாக (Paver block) மாற்றுவதற்கான அமைப்பினை (50TPD Capacity C&D waste Plant) SBM நிதியில் ஏற்படுத்த நடவடிக்கையில் உள்ளது.