பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், இந்தியை திணித்து தமிழுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் இன்று ( 12.09.2023) தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 நாள் தொடர் போராட்டம் நடைபெற்றது.
அதேபோல, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ரயிலை மறிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிலைமை விபரீதம் அடைவதை பார்த்த போலீசார் ரயிலை மறிக்க முயன்றதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில் நிலையத்தின் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.