திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே மது அருந்தியபடியே “ஹாயாக” இருசக்கர வாகனத்தில் பறக்கும் வாலிபர்கள்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஒரு கையில் செல்போனை பார்த்தவாறும், மற்றொரு கையில் பீர் பாட்டிலை வைத்து குடித்தவாறும் வருகிறார். பின்னர் காலி பீர்பாட்டிலை ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அலட்சியமாக வீசி செல்கிறார். வாலிபரின் இத்தகைய செயலை அந்த வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்பது விதி ஆகும். ஆனால், வாகனத்தை ஓட்டியபடியே மது அருந்துவது எவ்வளவு பெரிய குற்றம். அந்த வாலிபர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.