சட்டமேதை அம்பேத்கர் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் திமுகவினர் மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.