Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலத்தில் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்…!* வாலிபர் கைது, மற்றொருவர் தப்பி ஓட்டம்

பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இரண்டு வாலிபர்கள் ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 421 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அரியமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (31) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய லால்குடியை சேர்ந்த இளையராஜா (40) என்பவரை தேடி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த புகையிலை பொருட்களை எங்கு கடத்தி சென்றார்கள்? யாரிடம் கொடுக்க சென்றார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்