திருச்சி, அரியமங்கலம் N.H-ல் தலைகுப்பற கவிழ்ந்த கார்! – அதிர்ஷ்ட வசமாக மூவர் உயிர் தப்பிப்பு! பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவிநாசிக்கு வந்த இவர், தனது தாய் விஜயகுமாரி மற்றும் தந்தை குழந்தைராஜியுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டார்.
அந்தக் கார் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்பக்க டயர் வெடித்து சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மூவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கார் மோதியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகளான உக்கடை அரியமங்கலத்தைச் சேர்ந்த பாமீதா பானு, மற்றும் அவரது கணவர் ஜாபர் அலி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.