Rock Fort Times
Online News

திருச்சி, காந்தி மார்க்கெட் வியாபாரிகளை தாக்கிய 5 பேர் கைது !

திருச்சியின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது. இங்கு கடந்த புதன்கிழமை ( பிப்ரவரி 5ம் தேதி ) இரவு 9.45 மணி அளவில் அருகே உள்ள உப்புப்பாறை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென காந்தி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்து, வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளை திடீரென தாக்கியதுடன், விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகளை தூக்கி எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வியாபாரிகள் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில், ரகளையில் ஈடுபட்ட ஹானஸ்ட் ராஜ், ராஜன், ரெக்ஸ் என்கிற சூசை, ரோஜர், சகாய ரிச்சர்ட் ஆகிய ஐந்து பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சகாய ரிச்சர்ட், ரோஜர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்