Rock Fort Times
Online News

ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம்  உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500,1500 கி.மீ. தூரத்துக்கு ரூ.5ம், 1501- 2500 கி.மீ. தூரத்துக்கு ரூ.10ம், 2500-3000 கி.மீ தூரத்துக்கு ரூ.15ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்தக் கட்டண உயர்வு நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்