Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: வேலைக்கு செல்வதா?, மேல் படிப்பை தொடர்வதா? மன அழுத்தத்தில் தவித்த மாணவர் தற்கொலை…!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அன்புமணி (வயது 24). இவர், திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை சண்டிவீரப்பன் கோவில் சந்து பகுதியில் தங்கியிருந்து திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். படிப்பு முடிந்தவுடன் அன்புமணியை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவர் மேல்படிப்பு படிக்க உள்ளதாக கூறியுள்ளார். வேலைக்கு செல்வதா?, மேற்படிப்பை தொடர்வதா? என மன அழுத்தத்தில் இருந்த அன்புமணி, தாம் தங்கியிருந்த வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அன்புமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்