Rock Fort Times
Online News

ஆந்திராவில் துயர சம்பவம்: கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி- பலர் படுகாயம்…!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ( நவ. 1) ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்