திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார். இவரது மனைவி கனிமொழி. (வயது 20)இருவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பிரதீஷ் குமார் விபத்தில் இறந்து விட்டார்.இந்த நிலையில் தனிமையில் இருந்த கனிமொழி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கனிமொழி தனது வீட்டின் கூரை கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை பார்த்த அவரது தாய் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு மேற்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.