திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சீலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவரது மகன் சூர்யா (வயது 13). இவன், தற்போது உறையூர் வைக்கோல் கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தான். இந்நிலையில் தனது நண்பருடன் ராஜா காலனி அருகில் உள்ள உய்யக் கொண்டான் ஆற்றில் குளிக்க சென்றான். ஆற்றில் இறங்கி சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்த சூர்யா, ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினான். இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி சிறுவனை மீட்டனர். ஆனால், சிறுவன் உயிர் இழந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார், சூர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.