திருச்சி பொன்மலை காருண்யா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 ). இவர் மயிலாடுதுறையில் பொதுப்பணித்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மைதிலி (39). வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் செந்தில்குமார், மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை மைதிலியுடன் காந்தி மார்க்கெட் அருகே தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த தனியார் பஸ், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது .இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மைதிலி மீது அந்த பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த மைதிலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.