Rock Fort Times
Online News

தீபாவளி முதல் திருச்சியில் இருந்து இலங்கைக்கு கூடுதல் விமான சேவை…!

திருச்சி-இலங்கை இடையே தீபாவளி பண்டிகை நாளிலிருந்து கூடுதல் விமான சேவையை தொடங்கவுள்ளது,  ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்.  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி  விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சில நாடுகளுக்கு குறிப்பிட்ட வார  நாட்களில்  விமானங்கள் இயக்கப்படுகின்றன.இதில், இலங்கைக்கு மட்டுமே தினசரி சேவையாகும்.  கொரோனா காலத்துக்கு முன்புவரை இலங்கைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சேவைகள் இருந்தன.  அதன்பின்னர் விமான சேவை குறைக்கப்பட்டது.  இந்நிலையில், வாரத்துக்கு 7 சேவை என்றிருந்ததை கூடுதலாக்கி வாரத்துக்கு 8 சேவையாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கூடுதல் சேவை, தீபாவளி  பண்டிகையன்று (அக்.31) முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது செவ்வாய், புதன், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து திருச்சி வரும் விமானம் 10.10க்கு மீண்டும் புறப்பட்டு இலங்கை செல்லும். அதுபோல பிற்பகலில் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வந்து 4.10க்கு புறப்பட்டு செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி வார நாட்களில் வியாழக்கிழமை மட்டும் காலை மற்றும் மாலை என இரு நேரமும் திருச்சி-இலங்கை இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும், என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்