தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் முன்னதாக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். விழாவை முன்னிட்டு சிலம்பாட்டம், நடனம் மற்றும் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று மாட்டு வண்டியில் எறி அலுவலகத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.