திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை பொறுப்பாளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேரை தேர்வு செய்து இளைஞர்-இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பது, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு கழக வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.எஸ்.நஜீமா பாரிக், எம் ஜி.ஆர். மன்றம் கலிலுல் ரகுமான்,
அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஞானசேகர், சிறுபான்மை பிரிவு மீரான், இலக்கிய அணி பாலாஜி, பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மகளிரணி நசீமா பாரிக், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, கலைவாணன், ராஜேந்திரன், பூபதி, ஏர்போர்ட் விஜி, ரோஜர் மற்றும் இன்ஜினியர் ராஜா, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், மார்க்கெட் பிரகாஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அப்பாகுட்டி, ரமணிலால், இளைஞரணி டி.ஆர்.சுரேஷ்குமார், ஜெயகுமார், வக்கீல் முல்லை சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.