ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், ராமேசுவரம் செல்லும் 15 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 2-50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். அதுபோல, திருப்பதி விரைவு ரயில் மாலை 4-20-க்கு பதிலாக மாலை 4, 30 மணிக்கு ம், சென்னை எழும்பூர் விரைவு ரயில் மாலை 5.30-க்கு பதிலாக மாலை 5.50-க்கும், கோவை விரைவு ரயில் இரவு 7.30-க்கு பதிலாக இரவு 7.55-க்கும், சென்னை எழும்பூர் விரைவு ரயில் இரவு 8.35-க்கு பதிலாக இரவு 8.50-க்கும், கன்னியாகுமரி விரைவு ரயில் இரவு 9.10 க்கு பதிலாக இரவு 9.15-க்கும், மதுரை பயணிகள் ரயில் மாலை 6 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு ம் புறப்பட்டுச் செல்லும். அதேபோல, சென்னை எழும்பூர், திருப்பதி, அயோத்தி கண்டோன்மன்ட், ஃபெரோஷ்டர் ஆகிய விரைவு ரயில்கள் ராமநாதபுரத்துக்கு 5 முதல் 10 நிமிஷம் முன்னதாக சென்றடையும். மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் ராமேசுவரத்துக்கு காலை 10.45-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10,30-க்கு சென்றடையும். மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் மதுரைக்கு பிற்பகல் 3.25-க்கு செல்வதற்கு பதிலாக 3.20-க்கு சென்றடையும் காரைக்குடி -விருதுநகர் பயணிகள் ரயில் மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு வழக்கமாக செல்வதைவிட சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இந்த சேவை மாற்றம் மே 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments are closed.