Rock Fort Times
Online News

நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!

மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மீண்டும் அவசரமாக மும்பைக்கே சென்று தரை இறங்கியது. மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு (ஜூன் 27) 11 மணிக்கு, 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டும் விமானத்தை திருப்பி கொண்டு சென்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதனால், அதில் பயணம் செய்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர், விமானப் பொறியாளர்கள் குழுவினர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது. இந்த விமானம் இன்று (ஜூன் 28) அதிகாலை 4.35 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. விமானத்தில் இயந்திர கோளாறு மற்றும் அதிக கால தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்