Rock Fort Times
Online News

திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம்…- திருச்சியில் “திரி” வைத்த ஆளுநர்!

திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய ஆன்மீக திருத்தலமும் , தென் திருப்பதி என அழைக்கப்படுவதுமான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ரூ. 22 கோடி மதிப்பில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கோவிலுக்கு வருகை தந்தார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் ரவி கோவிலில் புதிதாக அமைக்கப்பட உள்ள ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கோயில் அறங்காவலர் கே.ஆர் பிச்சுமணி எழுதிய ” குணசீல மகாத்மியம் “மற்றும் சென்னக்கரை சுப்பிரமணியம் எழுதிய ” வள்ளுவத்தில் மெய்ஞானம் ” ஆகிய நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் ஆளுநர் பேசும் போது., ” மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மீகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்க பார்க்கிறார்கள். பாரத தேசம் ஒரு ஆன்மீக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்