திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 ). இவர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 5ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் ராகுல் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்கு பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Comments are closed.