திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 38 ). இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு டைப்ரைட்டிங் நிலையத்திற்கு சென்று இருந்தார். பின்னர் , அங்கிருந்து வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 4 பவுன் நகைகள் மற்றும் சில்வர் பொருட்கள், பணம் ஆகியவை திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.