அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
கேரளாவில் இருப்பதைப் போன்று தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறித்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பெல் அடித்தவுடன் வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Comments are closed.