திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன- மேயர் மு.அன்பழகன்…!
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில்,
மேயர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், பகுதி 2 மதிப்பீடு ரூ.377.29 கோடி மற்றும் பகுதி 3ல் ரூ.335.07 கோடி ஆக மொத்தம் ரூ.712.36 கோடிக்கு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. நிர்வாக மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஆலோசகர் மூலம் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் இடங்களில் சுகாதாரத்தினை மேம்படுத்தவும் மற்றும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகளை முழுமையாக வழங்குவதற்கு ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வார்டு எண். 8,9,10,11,12,15,16,17.18,21,24,25,26,35,40,41,42,45,54 பகுதியாகவும் , வார்டு எண்.36,37,38,43,44 – முழுவதுமாகவும் ஆக மொத்தம் 24 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Comments are closed.