Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது : கடந்த 9 நாட்களில் மட்டும் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்…!

சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15ம் தேதி மாலை திறககப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கனர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், உடனடி தரிசன முன்பதிவு மூலமும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. அந்தவகையில் கடந்த 9 நாட்களில் 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், சபரிமலையில் மண்டல சீசனை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 9 நாட்களில் சாமி தரிசனத்திற்கு 6 லட்சத்து12 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 23ஆம் தேதி வரை காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை உட்பட மொத்த வருமானம் ரூ.41 கோடியே 64 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 கோடியே 13 லட்சம் கூடுதல் வருமானம் ஆகும். பம்பை, எரிமேலி, வண்டிப்பெரியார் ஆகிய ஸ்பாட் புக்கிங் மையங்களில் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை மட்டும் கொண்டு வந்து முன்பதிவு செய்து தரிசிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்