தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எ.வ.வேலு. இவர் கல்வி நிறுவனங்களும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று ( 22.11.2023 ) மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.