ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 22ம் தேதி தொடக்கம்… * 23ம் தேதி நடக்கும் சென்னை- மும்பை போட்டிக்கு கட்டுப்பாடுகள்!
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதேநாளில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஹைதராபாத், ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் 23ம் தேதி சென்னை-மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகள் மோதும் போது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. அந்த அளவுக்கு இரு அணி வீரர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் டிக்கெட்டுகள் 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19ம் தேதி www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்கப்படும். போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
*ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
* பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது.
*கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னரே வர வேண்டும்.
*சிகரெட், பீடி, குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை சம்பந்தமான பொருட்களை கொண்டு வரக்கூடாது.
*அனைத்து கேலரிகளும் ரசிகர்களுக்கு விலையில்லா குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
*கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, விக்டோரியா விடுதி, ரயில்வே கார் பார்க்கிங், வாலாஜா சாலை, வி. பட்டாபிராமன் கேட் ஆகிய இடங்களின் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்டவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Comments are closed.