திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4- ல் நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்த வழக்கு அல்ல, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதங்களை முன் வைத்தனர். இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா? அல்லது தள்ளுபடி செய்யலாமா? என ஜூன் 4-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மதியத்திற்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மதியம் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், இதுதொடர்பாக சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Comments are closed.