பழுதடைந்த திருச்சி ‘ஜி கார்னர்’ மேம்பாலம் இன்னும் 10 நாட்களில் சரி செய்யப்பட்டு விடும்- கலெக்டர் பிரதீப் குமார்…!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் உள்ள கட்டிடத்தில் வாக்கு பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பெண் பாதுகாவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம், துப்பாக்கியில் உள்ள தோட்டாவை காட்டுங்கள் என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், பொன்மலை ஜி கார்னர் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட பழுது 20 அல்லது 30 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது உயர் ரக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐஐடி பேராசிரியர் முன்னிலையில் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும். காய்ச்சலுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.