Rock Fort Times
Online News

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…!

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றியை கொண்டாடும் வகையிலும், இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் இன்று(15-05-2025) வெற்றி பேரணி நடைபெறுகிறது . இதில், பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகை தந்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க கவனம் செலுத்துவதில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது . தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். தமிழ்நாடு முன்னாள் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுப்பார்கள் என கூறினார். பெட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்