திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரை காணாமல் திடுக்கிட்டார். அக்கம் பக்கத்தில் தேடியபோது அந்த கார் பின்னோக்கி சென்று அங்குள்ள சாக்கடையில் கிடப்பது தெரியவந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் காரை நிறுத்திவிட்டு சென்றதால் பின்னோக்கிச் சென்று சாக்கடையில் விழுந்தது தெரிய வந்தது. அந்த காரை மீட்கும் பணி நடந்தது.நேற்றும் பஞ்சகரை வழியாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த கார் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சகரை சாலை எப்பொழுதும் வெளியூர் கார்களின் நிறுத்துமிடமாக உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரால் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் உள்ளதால் இது போன்ற சம்பவங்கள் நேரிடுகின்றன. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.