Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக மனைவி அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த கணவரின் உடல் கொண்டுவரப்பட்டதால் பெரும் சோகம்…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் மூவேந்தர் ( வயது 30). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.  இதனால், மனைவியை பிரசவத்திற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சமயபுரம்- மருதூர் சாலையில் கள்ளிக்குடி என்ற பகுதியில் சாலையின் வளைவு பகுதியில் அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து மூவேந்தர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனைக்கு கணவரின் உயிரற்ற உடல் கொண்டுவரப்பட்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூவேந்தர் இறந்த சம்பவத்தை அவரது மனைவிக்கு உறவினர்கள் தெரியப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்