Rock Fort Times
Online News

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது- மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர்…!

தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இன்று(05-03-2025) பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. இதற்காக காலை 9 மணி முதல் மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு ஆர்வமுடன் வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து கடைசி கட்ட ரிவிஷனில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கல்விக் கடவுளான சரஸ்வதி மற்றும் தங்களது இஷ்ட தெய்வங்களை நினைத்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். அதனைத்தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர். முதல் நாளான இன்று தமிழ் தேர்வு மற்றும் இதர மொழிப் பாடத்தேர்வுகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 106 அரசுப்பள்ளிகள், 71 அரசு உதவி பெறும் பள்ளிகள், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 258 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 357 மாணவர்கள், 16 ஆயிரத்து 737 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 94 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர். இதில் 392 மாற் றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அவர்களுக்கான சலுகை அடிப்படை யில் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களை தவிர, 271 ஆண்கள், 176 பெண்கள் என 447 பேர் 14 மையங்களில் தனித்தேர்வர்களாக எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 230 பறக்கும் படை நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமையில், தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் பிளஸ் -1 தேர்வு மார்ச் 27ம் தேதி நிறைவடைகிறது.

                    ADVERTISEMENT…👇🏻

                                     

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்