Rock Fort Times
Online News

திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!

திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பாலமுருகன் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்