சேலம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களில் உள் நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மேல் மாடியில் உள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் திடீரென தீப்பற்றியது. கரும் புகையுடன் கொழுந்துவிட்டு தீ எரிந்ததால் பணியில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அங்கு சிக்கி தவித்த உள்நோயாளிகள் அனைவரையும் மீட்டு வேறு வார்டுகளுக்கு
அனுப்பி வைத்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றாலும், பொருள் சேதம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை.
ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீப்பிடித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.