Rock Fort Times
Online News

திருச்சியில் பரபரப்பு:வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- போலீசார் விசாரணை…!

திருச்சி, ஆழ்வார்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முகமது தாபர் அலி (42). வழக்கறிஞர். இவர் பாலக்கரை, சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் ஆனது. இருந்தும் தாபர் அலி அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரனான சங்கிலியாண்டபுரம், பாத்திமா நகரைச் சேர்ந்த இம்ரான் (20), தாபர் அலியை கீழப்புதூர் சாலையில் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த வழக்கறிஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்