சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை எண் 140 ஐ ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச்சாவடி அமைத்து கார்ப்பரேட் கம்பெனி சுங்கவரி வசூல் செய்ய அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று (01-04-2025) தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர்கள் கருப்பையா, ஜனார்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ், மாவட்ட பொருளாளர்கள் பிரேம்குமார், கருணாநிதி, ரவிச்சந்திரன், ஸ்ரீதர், ஜவகர், மாநில செயலாளர் பழனிச்சாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், முத்துக்கருப்பன், சந்திரசேனன், பொன்முடி, உதயகுமார், வெங்கடேசன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் நவநீதன், மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் திடீரென அரசாணை எண் 140 ஐ தீயிட்டு கொளுத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்ட வரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.