Rock Fort Times
Online News

நெல்லையில் பரபரப்பு:- ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வெட்டிக்கொலை…!

திருநெல்வேலி மாநகர் காட்சி மண்டபம் அருகே இன்று (18/03/2025) காலை 5-30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (60) என்பதும், தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வக்புக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்தது. ரம்ஜான் நோன்புக்காக வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையை முடித்துவிட்டு வந்த போது அவரை சிலர் கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்