Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் திருச்சி மத்திய பஸ் நிலையம் மட்டும் இன்றி மேலும் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படவுள்ளது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களில் இந்த தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், தீபாவளி பண்டிகை முடிந்து இருநாட்கள் வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்