கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் சட்டை அணியாமல் போராட்டம்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தின் (சிஐடியு) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, கண்டோன்மெண்ட் புறநகர் பேருந்து டெப்போ அருகில் ஊழியர்கள் சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு சங்க செயலாளர் அ.பக்ருதீன் அலி அகமது தலைமை தாங்கினார். போராட்டத்தில் நிர்வாகிகள் மாணிக்கம், பாலசுப்பிரமணியன், கருணாநிதி, சண்முகம், ராமதாஸ், மகேந்திரன், ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் வழங்க வேண்டும், 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
Comments are closed.