தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மருங்காபுரியில் உள்ள குடோனில் 4 தொழிலாளர்கள் உள்ளே வைத்து பூட்டப்பட்டதால் பரபரப்பு… (வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்டம், மருங்காபுரியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக குடோன் உள்ளது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் லாரிகளில் வந்த உணவுப் பொருட்களை வெளி மாநில இளைஞர்களை வைத்து இறக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் எங்களது வாழ்வாதாரமாக இருப்பது சுமை தூக்கும் தொழில் தான். எனவே எங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என மருங்காபுரி கிடங்கின் அதிகாரியிடம் கேட்டுள்ளனர். இதனால், நான்கு பேரையும் வளாகத்தில் வைத்து வாயிலின் கேட்டை பூட்டிவிட்டனர். நான்கு தொழிலாளர்களை குடோனின் உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கேட்டை திறந்து விட்டு அவர்களை வெளியே அழைத்து வந்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், 8 வெளி மாநில தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து சென்றனர். 4 சுமை தூக்கும் தொழிலாளர்களை குடோனில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.