திருச்சி, பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்…- கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் பங்கேற்பு..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி கழகம் 47 மற்றும் 47(அ) வட்டக் திமுக சார்பில் பென்சனர் காலனி ஜெயில் கார்னர் அருகில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்மலை பகுதி கழகச் செயலாளர் கொட்டப்பட்டு இ.எம். தர்மராஜ் வரவேற்றார். 47 -வது வட்டச் செயலாளர் நாகவேணி வே.மாரிமுத்து, மற்றும் 47 (அ) வட்டக் கழக செயலாளர் ஆர்.பி.மனோகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழகப் பேச்சாளர் புதுக்கோட்டை தமிழ் இனியன், கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் இளம் பேச்சாளரான இனியன் அமுதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் சையது ஜஹாங்கீர், 47 -வது வட்ட அவை தலைவர் மற்றும் குணசேகரன், 47 -வது வட்ட (அ) அவைத் தலைவர் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
இக்கூட்டத்தில் மாநகர அவைத் தலைவர் நூர் கான், மாநகர துணைச் செயலாளர்கள் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி உட்பட மாவட்ட, மாநகர வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Comments are closed.