மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த நிலைய மேலாளர்…- சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ இதோ…
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் ,கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று (ஜூன் 8) பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக ஏராளமான பயணிகள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அப்போது திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. வெகுநேரம் ஆகியும் பேருந்து புறப்படுவதற்கு தாமதமான நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டபோது, மேலாளர் கூறினால் தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் என கூறினார். பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம், பஸ்சை விரைவாக எடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? நீங்கள் இப்படி என்னிடம் வாக்குவாதம் செய்தால் நீங்கள் போகும் இடத்திற்கு செல்ல முடியாது என பயணிகளை இழிவுபடுத்தும் வகையில் உதவி மேலாளர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாக அருகில் உள்ள அதிகாரிகளும் பேசியதால் பயணிகளுக்கும் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டியபடி உதவி மேலாளர் மாரிமுத்து தனது காலணியால் அவரை அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பேருந்து டிரைவர்கள் சங்கத்தினரும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.