Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!

130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்க வேண்டும், சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும், வாராந்திர கட்டாய ஓய்வு வேண்டும், வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இன்று(28-04-2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டச் செயலாளர் (எல்.ஆர்.எஸ்) சுதாகர் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.எம்.யூ. மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் கண்டன உரையாற்றினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்