Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மிக சமீப காலமாக திருச்சி ஏர்போட்டை மையமிட்டு தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இன்று காலையில் தான் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதற்குள் அடுத்த அதிர்ச்சி சம்பவமாக, சுமார் 47 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.இன்று ( பிப்.28 ) துபாயில் இருந்து திருச்சி வந்தடைந்த பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமாக சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில், சுமார் ஒன்பது தங்க ராடுகளை அவரது உடையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுமார் 549 கிராம் எடையுள்ள தங்க தகடுகளின் மதிப்பு சுமார் 47 லட்சத்து 97 ஆயிரம் என தெரிவித்தனர்.இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்