திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் வைத்திருந்த லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 501.5 கிராம் எனவும் அதன் மதிப்பு ரூ.30,52,129 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.