Rock Fort Times
Online News

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை…திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இருதயபுரம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான்ஜோசப்( வயது 48). உணவகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 26.12. 2019 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், லால்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஜான்ஜோசப்பை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(10-01-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜான்ஜோசப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஸ்ரீவத்ஸன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜாகீர்உசேன் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்