Rock Fort Times
Online News

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்கள் இருவருக்கு கட்டாய ஓய்வு…!

திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் 2 மாணவி​களுக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்​களுக்கு கட்​டாய ஓய்வு அளிக்கப்பட்​டுள்​ளது. திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் பொருளா​தா​ரத் துறை​யின் தலை​வ​ராகப் பணி​யாற்​றி, பின்​னர் வணி​க​வியல் துறைக்கு மாற்றப்பட்​ட​வர் பேராசிரியர் எஸ்​.கணேசன். தொலை உணர்​வுத் துறை​யின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்​கள் இரு​வர் மீதும் 2 மாணவி​கள் தனித்​தனி​யாக பாலியல் துன் புறுத்​தல் புகார்​கள் அளித்​திருந்​தனர். இதுகுறித்து பல்​கலைக்​கழகத்​தின் உள்ளக புகார் குழு விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யின் முடி​வில், இருவரும் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்​றது உறுதி செய்​யப்​பட்​டதை அடுத்​து, அவர்​களைப் பணி நீக்​கம் அல்​லது கட்டாய ஓய்வில் அனுப்ப கடந்த செப்டம்பர் 22 அன்று நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தில் பரிந்​துரைக்​கப்​பட்​டது. இந்​தப் பரிந்​துரையை ஏற்​று, இரு​வருக்​கும் கட்​டாய ஓய்வு அளிக்​கும் பல்​கலைக்​கழகத்​தின் முடிவுக்கு கல்​லூரிக் கல்வி ஆணை​யர் இ.சுந்​தர​வல்லி ஒப்​புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பல்​கலைக்​கழகம் தரப்​பில் கூறுகையில், திருச்சி பார​தி​தாசன் பல்கலைக்​கழக துணைவேந்​தர் குழு கன்​வீன​ராக, கல்லூரிக் கல்வி ஆணை​யர் சுந்​தர​வல்லி நியமிக்​கப்​பட்​ட​தில் இருந்து பல்​வேறு முக்​கிய நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். இது​போன்ற புகார்​கள் வந்​தால் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்​துரைக்​கிறார். தற்​போது 2 மாணவி​கள் புகார் அளித்த விவ​காரத்​தில், நடவடிக் கைக்கு உள்​ளான பேராசிரியர்​கள் அனுப்​பிய வாட்​ஸ்​அப் மெசேஜ்கள் உள்​ளிட்ட ஆதா​ரங்​கள் இருந்​த​தால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்