Rock Fort Times
Online News

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை…!

கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு, 11ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் பூங்காவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அந்த மாணவியின் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு பள்ளி சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக 7 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தவழக்கில் இன்று (18.07.2025) தீர்ப்பளிக்கப்பட்டது.  பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாரயணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகிய 7 பேருக்குச் சாகும் வரை (வாழ்நாள்) சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்